அந்த காலத்தில் சிறுவர்களின் புத்திகூர்மையை எடுத்துகாட்டும் நாட்டுபுற பாடல் ;
ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் பெண்ணை ஒரு சிறுவன் பார்க்கிறான் . அதை அந்த பெண் பார்த்து விடுகிறாள் .அப்போது இந்த வரிகளை பாடுகிறாள் ;
மாடு மேய்க்கும் சிறு தம்பியரே
மாற்றான் சிறு குழந்தாய்
மாடு தான் போகுதடா
மாமலைக்கு அப்பால்
அதை கேட்ட அந்த சிறுவன்,
மாடுதான் போனாலென்ன
மாமலைக்கு அப்பாலே
நீ குளிக்கும் மஞ்சளிலே
நீராடி போவேனடி
அந்த பெண் ,
மண்ணுருசி நீ அறியாய்
மரத்துருசி நீ அறியாய்
பெண்ணுருசி நீ அறியாய்
போடா சிறு தம்பியரே
அதை கேட்ட அந்த சிறுவன் ,
மண்ணுருசி வெள்ளாமை
மரத்துருசி சந்தனம்
பெண்ணுருசி வட்ட முகம்
பாராமல் போவேனோ
அந்த பெண் சிறுநகையுடன்,
ஆளான ஆளுமில்லை
ஆளுக்கு ஏத்த தோளுமில்லை
முன்கை பருக்கவில்லை
முகத்திலேயும் அரும்பவில்லை
இப்போது சிறுவன் ,
சித்தருவால் வெட்டதா
சிறு மிளகு உரைக்காதா
இந்த சிறுவன் பாய்ச்சுந்தண்ணி
கமுகுகேறிப் பாயாதா
அந்த பெண் துணிகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
( பயபுள்ள நம்ம கூட சேர்ந்தவன் போல இருக்குது .)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
:))))))))))))
சூப்பரா இருக்குங்க பால்கி...!!
கருத்துரையிடுக