புதன், 18 மார்ச், 2009

பண்டைய கால ஜொள்ளு

அந்த காலத்தில் சிறுவர்களின் புத்திகூர்மையை எடுத்துகாட்டும் நாட்டுபுற பாடல் ;

ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் பெண்ணை ஒரு சிறுவன் பார்க்கிறான் . அதை அந்த பெண் பார்த்து விடுகிறாள் .அப்போது இந்த வரிகளை பாடுகிறாள் ;

மாடு மேய்க்கும் சிறு தம்பியரே

மாற்றான் சிறு குழந்தாய்

மாடு தான் போகுதடா

மாமலைக்கு அப்பால்


அதை கேட்ட அந்த சிறுவன்,


மாடுதான் போனாலென்ன

மாமலைக்கு அப்பாலே

நீ குளிக்கும் மஞ்சளிலே

நீராடி போவேனடி


அந்த பெண் ,


மண்ணுருசி நீ அறியாய்

மரத்துருசி நீ அறியாய்

பெண்ணுருசி நீ அறியாய்

போடா சிறு தம்பியரே


அதை கேட்ட அந்த சிறுவன் ,


மண்ணுருசி வெள்ளாமை

மரத்துருசி சந்தனம்

பெண்ணுருசி வட்ட முகம்

பாராமல் போவேனோ


அந்த பெண் சிறுநகையுடன்,


ஆளான ஆளுமில்லை

ஆளுக்கு ஏத்த தோளுமில்லை

முன்கை பருக்கவில்லை

முகத்திலேயும் அரும்பவில்லை


இப்போது சிறுவன் ,


சித்தருவால் வெட்டதா

சிறு மிளகு உரைக்காதா

இந்த சிறுவன் பாய்ச்சுந்தண்ணி

கமுகுகேறிப் பாயாதா

அந்த பெண் துணிகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
( பயபுள்ள நம்ம கூட சேர்ந்தவன் போல இருக்குது .)